விரைவு போக்குவரத்துக் கழகமேலாண் இயக்குநர் கே.இளங்கோவன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாளை (செப்.28) மீலாது நபி, செப். 30-ம் தேதி சனிக்கிழமை, அக்.1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, அக்.2-ம் தேதி காந்தி ஜெயந்தி என தொடர்ச்சியாக விடுமுறை வருகிறது.

இடையில் வெள்ளிக்கிழமை விடுப்பு எடுக்கும்பட்சத்தில் 5 நாட்கள் விடுமுறை கிடைப்பதால் பயணிகள் சொந்த ஊர்களுக்கு சென்று வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதைக் கருத்தில் கொண்டு சென்னையில் இருந்து இன்று இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 250 பேருந்துகளும், செப்.29-ம் தேதி 450 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இதேபோல், கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம், பெங்களூரு போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கு 400 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 1,100 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

மேலும், அக்.2-ம் தேதி சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. www.tnstc.in மற்றும் tnstc செயலி மூலமாக முன்பதிவு செய்து பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *