சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சொத்து உரிமையாளர்கள் மற்றும் வணிகர்களின் நலன் கருதி நாளை (மிலாது நபி), செப்.30-ம்தேதி (சனிக்கிழமை) ஆகிய அரசு விடுமுறை நாட்களில் ரிப்பன் கட்டிடத்தில் உள்ள வருவாய் துறை தலைமையிடம், மண்டலங்களில் உள்ள வருவாய்த் துறைபிரிவுகளில் சொத்துவரி மற்றும் தொழில்வரி வசூல் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

சொத்துவரி மற்றும் தொழில் வரியை செப்.30-ம் தேதிக்குள் செலுத்தாவிட்டால், விதிகளின்படி அக்.1-ம் தேதி முதல் அபராத வட்டித் தொகை விதிக்கப்படும். எனவே, சொத்து உரிமையாளர்கள், வணிகர்கள் செப்.30-க்குள் வரியை இணையதளம், தலைமையகம் மற்றும் மண்டல அலுவலகங்கள் போன்றவற்றின் வாயிலாக செலுத்தி, சென்னை மாநகராட்சியின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *