இன்று காலை(25.02.2015) இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கியது. நேற்று மாலை சற்று உயர்வுடன் முடிந்த பங்கு வர்த்தகம் இன்று காலை அதே உயர்வுடன் துவங்கியுள்ளது. நேற்று மாலை மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் 29,004.66 ஆக இருந்தது, இன்று காலை 215.95 புள்ளிகள் உயர்ந்து 29,220.63 ஆக உள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி நேற்று 8,762.10 ஆக இருந்தது, இன்று காலை 63.65 புள்ளிகள் உயர்ந்து 8,825.75 ஆக உள்ளது.

அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பும் உயர்ந்துள்ளது. நேற்று 62.26 ரூபாயாக இருந்த இந்திய மதிப்பு இன்று 62.06 ரூபாயாக உயர்ந்துள்ளது.

English Summary: Indian Stock Market and Indian Money Value increased in today morning.