வெள்ளிக்கிழமை(27.02.2015) மதுராந்தகம் ரயில்வே லெவல் க்ராசிங் அருகே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெறுவதால் கிழ்க்கண்ட ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த ரயில்கள் குறிப்பிட்ட சில பகுதிக்கு மட்டும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது:

ரயில் எண்.66043/66044 சென்னை கடற்கரை-மேல்மருவத்தூர்-சென்னை கடற்கரை செல்லும் ரயில் செங்கல்பட்டு-மேல்மருவத்தூர் வரை தற்காலிகமாக ரத்து செய்யபடுகிறது.

ரயில் எண்.56037/56038 சென்னை எழும்பூர்-புதுச்சேரி-சென்னை எழும்பூர் செல்லும் ரயில் செங்கல்பட்டு-புதுச்சேரி இடையே தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரயில் எண்.56041/56042 திருப்தி-புதுச்சேரி-திருப்பதி செல்லும் ரயில் தற்காலிகமாக செங்கல்பட்டு-புதுச்சேரி இடையே தற்காலிகமாக ரத்து செய்யபடுகிறது.

இந்த ரயில் முழுவதுமாக ரத்து செய்யபடுகிறது:

ரயில் எண்.66045/66046 மேல்மருவத்தூர்-விழுப்புரம்-மேல்மருவத்தூர் இடையே செல்லும் ரயில் வண்டி முழுவதுமாக ரத்து செய்யபடுகிறது.

இந்த ரயில் நேரம் மாற்றப்பட்டுள்ளது:

ரயில் எண்.12605 சென்னை எழும்பூர்-காரைக்குடி, பல்லவன் விரைவு வண்டி சென்னை எழும்புரில் இருந்து 30 நிமிடம் தாமதமாக 15.45 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் தாமதமாகும்:

ரயில் எண்.16854 திருச்சி-சென்னை எழும்பூர் விரைவு வண்டி மேல்மருவத்துரில் 45 நிமிடம் நிறுத்தப்பட்டு கால தாமதமாக வரும்.

English Summary: Chennai Egmore-Villupuram Trains timings be rescheduled, regulated and Cancelled.