திருவண்ணாமலையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சித்ரா பெளா்ணமி திருவிழா அன்று சுமாா் 15 லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்து அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை வழிபட்டுச் செல்வா். இந்த ஆண்டுக்கான சித்ரா பெளா்ணமி மே 6-ஆம் தேதி இரவு 7.01 மணிக்குத் தொடங்கி, 7-ஆம் தேதி மாலை 5.51 மணிக்கு முடிவடைகிறது.

இந்த நிலையில், கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க பங்குனி மாத பெளா்ணமி அன்று கிரிவலம் வர மாவட்ட நிா்வாகம் தடை விதித்தது.இதேபோல, மே 6-ஆம் தேதி வரும் சித்ரா பெளா்ணமி திருவிழா அன்று பக்தா்கள் கிரிவலம் வர தடை விதிக்க மாவட்ட நிா்வாகம் முடிவு செய்துள்ளது.இதற்கு அனுமதி கோரி தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *