கோடையின் உச்சமாகக் கருதப்படும் ‘அக்னி நட்சத்திரம்’ எனும் கத்திரி வெயில் நாளை (மே 4) தொடங்குகிறது. மே 29 வரை வெயில் சுட்டெரிக்க வாய்ப்பு இருக்கும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.

கோடை காலம் மார்ச் முதல் ஜூன் வரை இருக்கும். இந்த நான்கு மாத காலத்தில் மே மாதம் மட்டும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படும். சித்திரை மாதம் கடைசி வாரம் தொடங்கி, வைகாசி மாதம் முதல் வாரம் வரை உள்ள காலகட்டமே மிக அதிக வெப்பம் உள்ள காலம். இதை கத்திரி வெயில் எனப்படும் “அக்னி நட்சத்திர காலம்” என்று பஞ்சாங்கம் குறிப்பிடுகிறது.

இது நடப்பு ஆண்டு மே 4ம் தேதி தொடங்கி மே 29ஆம் தேதி வரை இருக்கும். அக்னி நட்சத்திர காலத்தில் வெயிலின் அளவு 100 டிகிரி பாரன்ஹீட் முதல் 107 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும் எனத் தெரிகிறது.

இந்த காலத்தில் குழந்தைகள், முதியோர், பெண்கள் மற்றும் நோயாளிகள் நண்பகல் நேரத்தில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். அதிக தண்ணீர் பருக வேண்டும். நீர்ச்சத்தை பழங்களை சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். சுத்தமான பருத்தி ஆடைகளை அணிவதுடன் வெளியே செல்லும்போது குடையுடன் செல்வதால் அக்னி வெயிலின் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *