சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டல அலுவலகங்களிலும் ஆதார் அட்டை பதிவு மையங்கள் செயல்பட்டு வரும் நிலையில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆதார் பதிவு மையத்தை சென்னை மக்கள் அனைவரும் ஆதார் அட்டைக்கு பதிவு செய்யும் வகையில் மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்தில் சென்னை மாவட்ட ஆட்சியர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதார் பதிவு மையம் ஒன்றை ஆரம்பித்து வைத்தார். இந்த மையத்தில் ராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்டவர்கள் மட்டும் பயனடையும் வகையில் செயல்பட்டு வருகிறது.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பல்வேறு காரணங்களுக்காக ஏராளமான பொதுமக்கள் தினந்தோறும் வருகை தருகின்றனர். இந்நிலையில் ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கும் ஆதார் பதிவு மையம் சென்னை மக்கள் அனைவருக்கும் செயல்பட்டால் பொதுமக்களுக்கு வசதியாக இருக்கும் என பொதுமக்கள் மத்தியில் இருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளன. மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் இந்த கோரிக்கைகள் குறித்து நடவடிக்கைகள் எடுப்பார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

English Summary : Be made to expand the center of the district collector office Aadhaar ?