நேற்று நள்ளிரவு 1:30 மணி அளவில் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். மூச்சுத்திணறல் குணமடைவதற்கான அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவருடைய உடல் நலத்தை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். உடல் நலம் தேறிய பிறகு அவர் மருத்துவரின் அறிவுரைப்படி வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.