sivakumar-301115தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து அதனால் ஆயிரக்கணக்கானோர் வெள்ளத்தில் அவதிப்பட்டு வரும் நிலையில் பல்வேறு தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்கள் முதலமைச்சரிடம் வெள்ள நிவாரண நிதி வழங்கி வருகின்றனர். அந்த வகையில் தற்போது திரையுலகை சேர்ந்தவர்களும் நடிகர் சங்கம் மூலம் வெள்ள நிவாரண நிதி விரைவில் வழங்கவுள்ளனர்.

இந்த வகையில் முதன்முதலாக நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் வெள்ள நிவாரணத்திற்காக ரூ.25 லட்சம் நிதியுதவி செய்துள்ளனர். சிவகுமார் குடும்பத்தில் சிவகுமாரை தவிர அவரது இரண்டு மகன்களான சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் முன்னணி கதாநாயகர்களாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் மூவரும் இணைஅந்து ரூ.25 லட்சம் நடிகர் சங்கத்தின் மூலம் தமிழக அரசின் வெள்ள நிவாரண நிதிக்காக வழங்கியுள்ளனர்.

இதே போல் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளராக சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட நடிகர் விஷால் தனது பங்காக ரூ.10 லட்சம் வெள்ள நிவாரண நிதியாக அளித்துள்ளார். மேலும் முன்னணி நடிகர்களில்

ஒருவரான நடிகர் தனுஷ் ரூ.5 லட்சம் ரூபாயை நடிகர் சங்கத்திடம் வெள்ள நிவாரண நிதியாக கொடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இவர்களை அடுத்து இன்னும் சில நடிகர்கள் வெள்ள நிவாரண நிதி வழங்கவுள்ளதாகவும், இந்த தொகைகள் அனைத்தும் நடிகர் சங்கம் மூலமாக தமிழக அரசின் வெள்ள நிவாரண நிதிக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும் என்றும் நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.English summary-Actor sivakumar family offered for flood relief