atlee-301115இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘தெறி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் இயக்குனர் அட்லி சமீபத்தில் இந்த படம் குறித்தும் விஜய் குறித்தும் பேட்டியளித்துள்ளார்.

அட்லி தனது பேட்டியில், “‘தெறி’ திரைப்படம் ஒரு ஆக்சன் படமாக மட்டுமின்றி ஃபேமிலி ஆடியன்ஸ்களையும் கவரும் வகையில் உருவாக்க விஜய் விரும்பியதாகவும் அவரது விருப்பத்தின்படி அனைத்து தரப்பினர்களையும் கவரும் வகையில் பஞ்ச் டயலாக், மாஸ் காட்சிகள் ஆகிய காட்சிகள் படத்தில் உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் தனது முந்தைய படமான ‘ராஜா ராணி’ படத்தில் ஹீரோக்களுக்கு இணையாக நயன்தாரா, நஸ்ரியா ஆகியோர்களுக்கு முக்கியத்துவம் இருந்தது போன்று ‘தெறி’ படத்திலும் நாயகிகளான சமந்தா மற்றும் எமிஜாக்சன் ஆகிய இருவருக்குமே முக்கியத்துவமான கேரக்டர்கள் வைத்துள்ளதாக அட்லி கூறியுள்ளார்.

மேலும் இந்த படத்தில் விஜய் எத்தனை வேடங்களில் நடித்துள்ளார் என்ற சஸ்பென்ஸை உடைக்க விரும்பவில்லை என்றும் ஃபர்ஸ்ட் லுக்கில் இருப்பது போன்று மூன்று வேடமா? அல்லது ஒரே வேடமா? என்பதை ரசிகர்களின் கற்பனைக்கே விட்டுவிடுவதாக கூறியுள்ளார்.

மேலும் இந்த படத்தின் இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ், பாடல்களை தெறியாக கம்போஸ் செய்து முடித்துவிட்டதாகவும், விரைவில் பாடல்கள் குறித்த விபரங்களை அவரே வெளியிடுவார் என்றும் அட்லி தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
English summary-Atlee speaks about vijay’s character in Theri