சென்னை: ‘அனைத்து பட்டப் படிப்புகளுக்கும் ஜனவரி, 15 வரை மாணவர் சேர்க்கை நடக்கும்’ என இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலையான ‘இக்னோ’ அறிவித்துள்ளது.இது குறித்து இக்னோவின் சென்னை மண்டல இயக்குனர் கிஷோர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இக்னோவால் நடத்தப்படும், பட்டப் படிப்புகள் முதுநிலை படிப்புகள் டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகள் சிறப்பு பி.காம்., – எம்.காம்., உள்ளிட்ட படிப்புகளுக்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த அனுமதி 2023 வரை வழங்கப்பட்டுள்ளது. எனவே இக்னோவில் அனைத்து வகை படிப்புகளுக்கும் நடப்பு கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை ஜன., 15 வரை நடக்கும்.

விண்ணப்பங்களை, https://onlineadmission.ignou.ac.in என்ற இணையதளத்தில் சமர்ப்பிக்கலாம். கூடுதல் விபரங்களுக்கு, rcchennai@ignou.ac.in என்ற, ‘இ – மெயில்’ முகவரி, 044 – -2661 8438, 2661 8039 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுஉள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *