exams-241115சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல்வேறு பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றும் நாளையும் நடைபெறுவதாக இருந்த சென்னை, அண்ணா, சட்ட பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக நவம்பர் 24, 25-ந் தேதிகளில் நடைபெறவிருந்த சட்ட பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் தள்ளிவைக்கப்படுவதாகவும், மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் பி.வணங்காமுடி தெரிவித்தார்.

இதே போல் 24, 25-ந் தேதிகளில் நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாகவும், மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.தாண்டவன் தெரிவித்தார்.

மேலும் கனமழை காரணமாக, நவம்பர் 12 முதல், 28-ந் தேதி வரை தள்ளிவைக்கப்பட்ட பொறியியல் செமஸ்டர் தேர்வுகளின் மறுதேதி விவரங்கள் அடங்கிய பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டது. இது குறித்து அண்ணா பல்கலைக்கழக கூடுதல் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் அனுப்பியுள்ள ஒரு சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது: தொடர் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இளநிலை, முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான (முழுநேரம், பகுதிநேரம்) புதிய அட்டவணையை https://www.annauniv.edu என்ற இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் வேறு எந்த இணையதளத்தின் தகவலையும் மாணவர்கள் நம்ப வேண்டாம் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
English summary-Anna University Semester Exams Rescheduled Dates