திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் நேற்று ,இன்று நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது.

தமிழகத்தை மிரட்டி சென்ற கஜா தனது கோரத்தை காண்பித்து 4 மாவட்டங்கள் உட்பட தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சுழன்று சூறைக்காற்றால் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த புயல் வீடுகள்,கால்நடைகள்,மனித உயிரிகளும் மற்றும் மரங்களும் பலத்த சேதமடைந்தது.

சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அதில் திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் நேற்று,இன்று நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது. 3 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் திட்டமிட்டபடி தேர்வுகள் நடக்கும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *