திருமலை திருப்பதி தேவஸ்தானம் சாா்பில் வரும் ஏப்ரல் மாதத்துக்கான ரூ.300/- சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் இன்று(ஜன. 24) காலை 10 மணிக்கு இணையத்தில் வெளியிடப்படுகிறது.

திருமலை ஏழுமலையான் தரிசனத்துக்காக தேவஸ்தானம் 90 நாள்களுக்கு முன் தரிசன டிக்கெட்டுகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், 2024 ஏப்ரல்மாதத்துக்கான ரூ.300/- சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் ஜனவரி24 காலை 10 மணிக்கு இணையத்தில் வெளியிடப்படுகிறது.

திருமலை மற்றும் திருப்பதியில் அறைகளுக்கான முன்பதிவு ஜனவரி 24 -ஆம் தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்படும். ஏப்ரல் மாதத்துக்கான, திருப்பதி திருமலையின் ஏழுமலையான் சேவை ஒதுக்கீடு ஜனவரி 27 அன்று காலை 11 மணிக்கும், நவனிதா சேவா(வெண்ணெய் கடையும் சேவை) ஒதுக்கீடு மதியம் 12 மணிக்கும், பரகாமணி சேவை ஒதுக்கீடு மதியம் 1 மணிக்கும் வெளியிடப்படும்.

பக்தா்கள் இதைக் கருத்தில் கொண்டு https://ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளத்தில் சேவை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுமாறு தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *