இயக்குனர் சுந்தர் சி நடித்து இயக்கிய அரண்மனை’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க சுந்தர் சி முடிவு செய்திருந்தார். இதற்கான ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தன.

இந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்த ஹன்சிகாவுடன் த்ரிஷா, பூனம்பாஜ்வா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஹீரோவாக சித்தார்த் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் சென்னையில் தொடங்கியது.

சிக்கன் பிரியாணி கடை போன்ற செட் போடப்பட்டு அதில் முதல் நாள் படப்பிடிப்பு நடந்தது. இந்த படத்திற்கு சுந்தர் சி இயக்கிய ஆம்பள படத்திற்கு இசையமைத்த ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கவுள்ளார்.

முந்தைய படம் போலவே இந்த படமும் பேய், த்ரில் மற்றும் சஸ்பென்ஸ் கலந்த படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

English Summary : After success of Aranmanai, Sundar.C decided to shoot Aranmanai – 2.