நடுத்தர வயது பெண்களுக்கு பெரும் பிரச்சனையாக இருக்கும் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சென்னையில் நாளை மாரத்தான் போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ‘பிங்கத்தான்’ என்று அழைக்கப்படும் இந்த போட்டி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் உதவியுடன் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் இணைந்து நடத்துகின்றன.

இந்த போட்டி குறித்து நடிகை ஷோபனா செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது, ‘சென்னையில் இரண்டாவது முறையாக நடைபெறும் இந்த பிங்கத்தான்’ போட்டி நாளை தீவுத்திடலில் நடைபெற இருப்பதாகவும், பெண்களைத் தாக்கும் மார்பகப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே இந்த போட்டி நடத்தப்படுவதாகவும் கூறினார்.

இந்த மாரத்தான் போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் www.pinkathon.in என்ற இணையதளத்தில் பதிவு செய்துவிட்டு நாளை போட்டி நடைபெறும் இடத்திற்கு வரவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் இவ்வருடம் சுமார் 10,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

English Summary: Awareness marathon program for breast cancer is going to be held on 12th April in Chennai.