ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பிக்க ஒரே இடத்தில் சிறப்பு முகாம் நடத்தி வழங்கப்பட உள்ளதாக என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியுள்ளார் .

இதற்காக இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவாளர் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் மாநிலம் முழுவதும் நடத்தப்படும்.இதற்கான பயிற்சிக் கையேடுகள் தேர்தல் ஆணையத்தால் உருவாக்கப்பட்டுள்ளது என செய்தியாளர்களிடம் சந்தீப் சக்சேனா தெரிவித்தார் .

மேலும் இந்த சிறப்பு முகாம் தொடர்பாக மார்ச் 13 -ல் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளிக் காட்சி மூலம் உரையாடஇருப்பதாகவும் இதைத் தொடர்ந்து மார்ச் 19-ல் மாவட்ட அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

English Summary : Tamil Nadu Chief Electoral Officer specialize a camp to apply for both Aadhar card and Voter ID at same place and time.