பராமரிப்புப் பணி காரணமாக புதன்கிழமை (நவ.29) முதல் கடற்கரையிலிருந்து தாம்பரம் செல்லும் இரவு நேர கடைசி மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:

பயணிகளின் பாதுகாப்பு கருதி தாம்பரம் ரயில் நிலையத்தில் புதன்கிழமை (நவ.29) முதல் டிச.14-ஆம் தேதி வரை நள்ளிரவு 12.25 முதல் அதிகாலை 2.25 வரை பொறியியல் வேலைகள் மற்றும் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.

இதனால், அந்த நாள்களில் சென்னை கடற்கரையிலிருந்து இரவு 11.59 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரயிலும், மறுமாா்க்கமாக தாம்பரத்திலிருந்து இரவு 11.40 மணிக்கு கடற்கரைக்கு செல்லும் ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *