கோடை காலத்தில் ரத்த வங்கிகளில் இருப்பு வைத்திருக்கும் ரத்தம் குறைந்து பெரும் தட்டுப்பாடு ஏற்படுவது வழக்கம். எனவே ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் ரத்ததான முகாமை ஏற்படுத்தி வரும் தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவை, இவ்வருடமும் ரத்ததான முகாமை நாளை நடத்தவுள்ளது.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூர்பா காந்தி பொது மருத்துவமனை வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ரத்ததான முகாம் நடைபெறவுள்ளது என்றும், இந்த முகாமில் 18 வயது முதல் 60 வயது வரை உள்ள, 45 கிலோ எடைக்கு அதிகமாக உள்ள ஆண் மற்றும் பெண்கள் ரத்த தானம் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமில் சேகரிக்கப்படும் ரத்தம் கஸ்தூர்பா காந்தி மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கிக்கு அளிக்கப்படும் என 108 ஆம்புலன்ஸ் சேவை அதிகாரிகள் தெரிவித்தனர்.

English Summary : 108 ambulance service operates blood camp tomorrow in Chennai.