திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நாளை (27.9.2022) மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதற்கான அங்குரார்பணம் மற்றும் சேனாதிபதி உற்சவர் வீதி உலா இன்று (26.9.2022) இரவு நடைபெற உள்ள நிலையில் ஏழுமலையான் கோயில் மற்றும் திருமலை முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

முதல் நாளான நாளை (செப் 27) செவ்வாய்க்கிழமை மாலை 5.45 மணி முதல் 6.15 மணிக்குள் பிரமோற்சவ கொடியேற்றம் நடைபெறும். அன்று முதல் 9 நாட்களுக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் சுவாமி பல்வேறு வாகனங்களில் மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

நிறைவு நாளான 5ம் தேதி காலை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *