மே 18 ஆம் தேதி முதல் தமிழகத்தில் அரசு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, தமிழக போக்குவரத்துத் துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் நிர்வாக இயக்குநர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

  • கொரோனா பொதுமுடக்கம் முடிந்த பின்னர் 50 சதவீத பயணிகளுடன் மட்டுமே அரசு பேருந்துகள் இயங்கப்பட வேண்டும்.
  • பேருந்துகளின் இருக்கைகளில் சமூக விலகல் கடைபிடிக்கப்படுவதை நடந்துநர் உறுதி செய்ய வேண்டும்
  • பயணிகள் அமருவதற்கான குறியீடுகள் (மார்க் செய்தல்) இருக்கையில் இடப்பட வேண்டும்.
  • மாஸ்க் அணிந்து வருபவர்களை மட்டுமே பஸ்களில் அனுமதிக்க வேண்டும்.
  • பயணிகள் வரிசையில் நின்றபடி பேருந்துகளில் ஏற வேண்டும்.
  • பஸ் ஜன்னல்கள் கண்டிப்பாக திறந்து வைத்திருக்க வேண்டும்.
  • பேருந்தில் நின்று கொண்டே, பயணம் செய்பவர்களுக்கு இடையே 6 அடி இடைவெளி இருப்பதை நடத்துநர்கள் உறுதி செய்ய வேண்டும்.
  • கூகுள் பே உள்ளிட்ட செயலிகள் மூலம் பயணக் கட்டணத்தை செலுத்த பயணிகளை அனுமதிக்க வேண்டும்.
  • மாதாந்திர பாஸ் அட்டையையும் பயன்படுத்தலாம்.
  • பேருந்து நிலையங்களில் பஸ்களை 5 மீட்டர் இடைவெளி விட்டு நிறுத்த வேண்டும்.
  • ஓட்டுநர், நடத்துநர்கள் மருத்துவ பரிசோதனை செய்த பிறகே பேருந்துகளை இயக்க அனுமதிக்கப்படுவார்கள்.

அவர்களுக்கு மாஸ்க், கையுறை, கிருமிநாசினி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டுதல் நெறிமுறைகளை போக்குவரத்துத் துறை செயலாளர் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *