திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 13ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. நாள்தோறும் தர்மாதி பீடம், புன்னைமர வாகனம், சேஷ வாகனம், பரமபதநாதன் திருக்கோலம், சிம்ம வாகனம், சூரிய பிரபை, சந்திர பிரபை வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.

கடந்த 6ம் தேதி கருட சேவை, கோபுரவாசல் தரிசனம், ஏகாந்த சேவை, அம்ச வாகனத்தில் பெருமாள் எழுந்தருளினார். நேற்று காலை 5.30 மணிக்கு பல்லக்கு நாச்சியார் திருக்கோலம் நிகழ்ச்சி நடந்தது. இரவு 8.30 மணிக்கு அனுமந்த வாகனம் திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது.

முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை(10.05.2023) காலை நடக்கிறது. இதை முன்னிட்டு, காலை 5 மணிக்கு பெருமாள் தேரில் எழுந்தருளல், காலை 7 மணிக்கு தேரோட்டம் தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது. தொடர்ந்து, வரும் 12ம் தேதி காலை 6.15 மணிக்கு ஆளும் பல்லக்கு- தீர்த்தவாரியும், அன்று இரவு 7.45 மணிக்கு கண்ணாடி பல்லக்கு நிகழ்ச்சியும் நடைபெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *