போக்குவரத்து நெரிசலில் சிக்காமல், விரைவாக, சொகுசாக செல்லமுடிவதால், சென்னையில் மெட்ரோரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. தற்போது தினமும் 2.10 லட்சம்முதல் 2.50 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக, மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல இணைப்பு வாகன வசதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுபோல, பெண் பயணிகளின் பாதுகாப்பு கருதி, பெண்களே இயக்கும் இணைப்பு வாகன வசதி கொண்டு வரப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *