கடந்த ஞாயிறு அன்று ஆந்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒருவர் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த ஒருவரின் நுரையீரல் சென்னையை சேர்ந்த ஒருவருக்கு வெற்றிகரமாக நேற்று பொருத்தப்பட்டது.

விசாகப்பட்டினத்தை சேர்ந்த 27 வயது சூர்யநாராணன் என்ற பள்ளி ஆசிரியர் கடந்த ஞாயிறு அன்று சாலை விபத்து ஒன்றில் படுகாயம் அடைந்து மூளைச்சாவு அடைந்தார். எனவே அவருடைய உடல் உறுப்புகளை தானம் செய்ய அவருடைய பெற்றோர்கள் முன்வந்ததை அடுத்து அவரது உடலில் இருந்து பல்வேறு உறுப்புகள் எடுக்கப்பட்டு ஆந்திராவில் உள்ள பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது.

இந்நிலையில் சூர்யநாராயணனின் நுரையீரல் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு, பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நுரையீரல் செயல்படாத நோயாளி ஒருவருக்கு நேற்று வெற்றிகரமாக பொருத்தப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

English Summary : Chennai Patient gets lungs from andra’s youth