1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் மதுரையில் இன்று துவங்கி வைத்தார். ரூ.33.56 கோடியில் காலை உணவு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரையில் தொடங்கி வைத்தார். மதுரை ஆதிமூலம் மாநகராட்சி பள்ளியில் காலை உணவை மாணவர்களுக்கு ஊட்டிவிட்டு அவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி உணவுத்திட்டம் முதற்கட்டமாக 1,545 அரசுத் தொடக்கப்பள்ளிகளில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் பிற மாவட்டங்களில் நாளை தொடங்கி வைக்கப்பட உள்ளது.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு மெனு:

  • திங்கட்கிழமை – அரிசி, ரவை, சேமியா, கோதுமை ரவை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் உப்புமா மற்றும் காய்கறி சாம்பார்
  • செவ்வாய்க்கிழமை – ரவை, சேமியா, சோளம், கோதுமை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் காய்கறி கிச்சடி
  • புதன்கிழமை – வெண் பொங்கல் அல்லது ரவை பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார்
  • வியாழக்கிழமை – அரிசி, ரவை, சேமியா, கோதுமை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் உப்புமா மற்றும் காய்கறி சாம்பார்
  • வெள்ளிக்கிழமை – ரவை, சேமியா, சோளம், கோதுமை ரவை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் காய்கறி கிச்சடி மற்றும் ரவை கேசரி, சேமியா கேசரி வழங்கப்படும்.

காலை 8.15 மணி முதல் 8.45 மணிவரை மாணவர்களுக்கு காலை உணவு பரிமாறப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *