ஜெயா தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலையில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி “காலை மலர்“. இந்நிகழ்ச்சியில் ராசிபலன், விருந்தினர் பக்கம், சிரிப்போம் சிந்திப்போம், கம கம சமையல், மாத்தியோசி என பல பகுதிகள் இடம் பெறுகிறது. அதில் குறிப்பாக “தெரிந்ததும் தெரியாததும்” என்ற பகுதி நாள்தோறும் காலை 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

இந்த பகுதியில் நம் அன்றாட வாழ்வில் நாம் பார்த்த, கடந்து போன பல இடங்களில் என நமக்கு தெரிந்த விஷயங்களில் நமக்கு தெரியாத பல தகவல்களை சுவாரஸ்யமாக முனைவர் டாக்டர் நெல்லை பி.சுப்பையா அவர்கள் தொகுத்து வழங்குகிறார். ஐந்து நிமிடத்தில் ஒரு அற்புத தகவல் பெட்டகமாக அமைந்துள்ள இந்த ”தெரிந்ததும் தெரியாததும்” நிகழ்ச்சி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *