மழை வெள்ளத்தால் பாதிக்கபட்டு உள்ள கேரளாவிற்கு ஏற்கனவே தமிழக அரசு சார்பில் ரூ.5 கோடி நிவாரண நிதி அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்றும் மேலும் ரூ. 5 கோடி நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.

மேலும் 10 ஆயிரம் போர்வைகள், 15,000 லிட்டர் பால் 500 மெட்ரிக் டன் அரிசி, 300 மெட்ரிக் டன் பால்பவுடர் ஆகியவை வழங்கப்படும் என அறிவித்து உள்ளார்.மேலும் அத்தியாவசிய பொருட்கள், மருந்துகள் வழங்கப்படும் என
அறிவித்து உள்ளார்.

வெள்ளத்தால் ஏற்படக்கூடிய தொற்று நோய்களை தடுப்பதற்கும், மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்கும் 25 இலட்சம் டாக்சிசைக்கிளின் மாத்திரைகள் உள்ளிட்ட நோய் எதிர்ப்பு மருந்துகள் (ஆன்டிபயாடிக்ஸ்), 5 இலட்சம் குளோர்பெனரமின் மாத்திரைகள், 1 இலட்சம் களிம்புகள், பிற அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக 6 இலட்சம் எண்ணிக்கையிலான கை உறைகள், பாதுகாப்பான குடிநீர் வழங்குவதற்காக குளோரின் மாத்திரைகள் மற்றும் பிளீச்சிங் பவுடர் உள்ளிட்ட மொத்தம் ரூபாய் 1 கோடி மதிப்பிலான மருந்து பொருட்கள் கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து கேரள மாநிலம் பாலக்காட்டிற்கும், திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளன.

என மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *