தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பட்டயப் படிப்பில் சேருவதற்கான முதல்கட்ட கலந்தாய்வு ஏற்கனவே நடந்து முடிவடைந்த நிலையில் இன்று இரண்டாம் கட்டக் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள், ஏற்கெனவே ஆசிரியர் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்காத மாணவர்களின் வசதியை முன்னிட்டு இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று நடத்தப்படுகிறது. இந்தக் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள், தங்களது விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த மாவட்ட ஆசிரியர் கல்வி-பயிற்சி நிறுவனத்தில், கலந்தாய்வில் தவறாமல் பங்கேற்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இதற்காக அழைப்புக் கடிதம் தனியே அனுப்பப்படாது என்றும் இந்த அறிவிப்பையே அழைப்பு கடிதமாக எடுத்து கொண்டு விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ல வேண்டும்.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களை கலந்தாய்வுக்கு வரும்போது எடுத்துவர வேண்டும்.

English Summary : 2nd stage counselling for Diploma in Elementary teacher education starts today.