trains-spl-241115திருவண்ணாமலையில் நடைபெறவுள்ள கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை வரை இன்றும் நாளையும் முன்பதிவில்லாத சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு ரெயில் இன்றும் நாளையும் காலை 9.15 மணிக்குப் புறப்பட்டு மாலை 5.15 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். இதேபோல், திருவண்ணாமலையில் இருந்து இந்த இரண்டு நாட்களிலும் இரவு 10 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரெயில் (06034), மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு சென்ட்ரல் வந்து சேரும்.

இந்த ரெயில்கள் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், சோளிங்கர், வாலாஜா ரோடு, முகுந்தராயபுரம், காட்பாடி, வேலூர் கன்டோன்மென்ட், கனியம்பாடி, கன்னமங்கலம், ஆரணி ரோடு, போளூர், அகரம் மற்றும் துரிஞ்சாபுரம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. english summary-Deepam special trains