kesavan-241115அறிமுக இயக்குனர் விஜய் என்பவர் இயக்கிவரும் “க க க போ” என்ற படத்தில் அறிமுக நாயகனாக கேசவன் மற்றும் ரோபோ சங்கர், சாக்‌ஷி அகர்வால், பவர்ஸ்டார் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் இசை வெளியீடு அடுத்த வாரம் சென்னையில் நடைபெற இருந்தது.

இந்நிலையில் இந்த படத்தின் நாயகன் கேசவன் தந்து பெற்றோருடன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மலேசியாவிற்குச் சென்றார். மலேசியாவில் உள்ள நீர்வீழ்ச்சி ஒன்றில் பெற்றோரின் கண்முன்னேயே எதிர்பாராத விதமாக கேசவன். நீரில் இழுத்துச் செல்லப்பட்டார்

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கேசவனின் பெற்றோர் உடனே மலேசியா காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் மற்றும் மீட்பு பணியினர் இரவு முழுவதும் கேசவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் மறுநாள் காலை எட்டு மணியளவில் கேசவனின் உடல் மட்டுமே கண்டெடுக்கப்பட்டது.

படம் முடிந்து வெளியீட்டிற்குத் தயாராகியுள்ள நிலையில் அந்த படத்தின் நாயகன் மரணமான செய்தி அறிந்து இயக்குநர் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சினிமாவில் நடிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டு திரையுலகில் அடியெடுத்து வைத்த கேசவன் முதல் படம் நடித்து வெளியாவதற்குள்ளேயே மரணம் அடைந்தது கோலிவுட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
english summary-Ka Ka Ka Po actor Kesavan dies in Malaysia