thiruvallurதிருவள்ளூரில் சர்வதேச அளவிலான ஆன்மிக கூட்டம் ஜூலை 20ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரையிலான நான்கு நாட்களில் நடைபெற இருப்பதால் அந்த நான்கு நாட்களிலும் திருவள்ளூர் வழியாக செல்லும் கச்சிகுடா- சென்னை, மும்பை-சென்னை எக்ஸ்பிரஸ், பெங்களூரு- பாட்னா ரெயில், வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ், பிருந்தாவன் எக்ஸ்பிரஸ், ஆலப்புழை -சென்னை எக்ஸ்பிரஸ், கோவை- சென்னை எக்ஸ்பிரஸ், கோவை எக்ஸ்பிரஸ், பெங்களூரு -சென்னை பிருந்தாவன் எக்ஸ்பிரஸ், பழனி- சென்னை எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் தற்காலிகமாக திருவள்ளூர் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜூலை 25 மற்றும் 26ஆம் தேதிகளில் சென்னை-கச்சிகுடா எக்ஸ்பிரஸ், சென்னை -மும்பை எக்ஸ்பிரஸ், சென்னை -ஆலப்புழை எக்ஸ்பிரஸ், சென்னை -பெங்களூரு எக்ஸ்பிரஸ், சென்னை-பெங்களூரு சிட்டி பிருந்தாவன் எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ், சென்னை -கோவை எக்ஸ்பிரஸ், கோவை எக்ஸ்பிரஸ், பாட்னா-பெங்களூரு சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்களும் திருவள்ளூரில் ஒரு நிமிடம் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது.

English Summary:Details of temporary stands expresstrain at Tiruvallur