திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வியாழக்கிழமை காலை 24 மணி நேரம் தா்ம தரிசனத்துக்காக காத்திருந்தனா்.

திருப்பதிக்கு வரும் பக்தர்களின் கூட்டம் கோடை விடுமுறையை முன்னிட்டு அதிகரித்துள்ளது. அதனால் வியாழக்கிழமை காலை 29 காத்திருப்பு அறைகளில் பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்திற்காக காத்திருந்தனர். அவர்களுக்கு 24 மணி நேர காத்திருப்புக்கு பின்னர் தரிசன அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

ஆகவே, தர்ம தரிசனத்துக்கு 24 மணி நேரமும் ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 மணி நேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தர்களுக்கு 3 மணி நேரமும் தேவைப்பட்டது.

ஏழுமலையானை புதன்கிழமை முழுவதும் 74 ஆயிரத்து 995 பக்தர்கள் தரிசித்தனர்; இவர்களில் 38,663 பேர் முடி காணிக்கை செலுத்தினர். பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில், ரூ. 3.60 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *