27dc-water_pump_1094720eநம் வீடுகளில் வாட்டர் பில்டர்- Water Filter எனும் தண்ணீரைச் சுத்தம் செய்வதற்குக்க ருவிகளை வைத்திருக்கிறோம்.

இந்த வாட்டர் பில்டரில் ஒரு மூன்று மாதத்திற்குப் பிறகு அந்த பில்டரை வெளியில் எடுத்துப் பார்த்தால் வெள்ளையாக இருந்த வாட்டர் பில்டர் ஒரு மஞ்சள் நிறம் அல்லது பச்சை நிறத்தில் தூசுகளோடு இருக்கும்.

அதை உதறினால் தட்டினால் அதிலிருந்து மரத்தூள் போன்ற தூசுகள் கீழே கொட்டும்.

நாம் என்ன நினைப்போம் நல்லவேளை, இந்த வாட்டர் பில்டர் இருந்ததால் இந்த தூசுக்கள் நம் உடம்பிற்குள் செல்லவில்லை என்று.
ஆனால் நான் என்ன நினைப்பேன் என்றால் இந்த தாதுப் பொருட்கள் இந்தக் குடும்பத்தில் உள்ள, வீட்டில் உள்ள மனிதர்களுக்கு செல்லவில்லையா? அவர்கள் நோயோடு இருப்பார்கள் என்று நினைப்பேன்.

கண்ணுக்கே தெரியாத அந்தத் தூசுகளை பணம் செலவு செய்து சில கருவிகளை வாங்கி அதிலுள்ள தாதுக்களை பிரித்து
எடுத்துக் கீழே கொட்டுகிறோமே.அது தூசுக்கள் அல்ல, நம் உடலுக்குத் தேவைப்படும் அத்தியாவசிய தாதுப்பொருட்கள் ஆகும்.
நீங்கள் தண்ணீரைப் பார்த்தால் அதில் அந்தத் தூசுகள் கண்ணுக்குத் தெரியாது.பில்டரை பயன்படுத்தினால் மட்டுமே அந்தத்
தூசுகள் கண்ணுக்குத் தெரியும்.

தண்ணீரில் கண்ணுக்கே தெரியாத தூசுகளைப் பார்த்து பயப்படுகிறோமே, கொத்து பரோட்டா, சிக்கன் 65, ஆனியன்
ரோஸ்ட் என்று கடினமான பல பொருட்களைச் சாப்பிடும் நாம் கண்ணுக்கே தெரியாத அந்த சின்னச்சின்ன தாதுப் பொருட்களை
ஏன் அவ்வளவு கஷ்டப்பட்டு பில்டர் செய்ய வேண்டும்.

யாருடைய வீட்டில் தண்ணீரை பில்டர் செய்வதற்கு மெஷின் இருக்கிறதோ அந்த வீட்டில் உள்ள அனைவரும் உங்கள் இரத்தத்தில்
உங்களுக்குத் தேவையான தாதுப்பொருட்கள் இல்லாமல் மருந்துக் கடைகளில் சென்று இந்த தூசுகளை மருந்து என்ற பெயரில் வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.தண்ணீரில் இருக்கும் அந்தத் தாதுப்பொருட்களை பில்டர் செய்யாமல் குடித்தால் நாம் மருந்து மாத்திரை என்ற தூசுக்களை சாப்பிடுவதை தவிர்க்கலாம்.எனவே தண்ணீரை பில்டர் செய்யக் கூடாது.தண்ணீரை பில்டர் செய்து சாப்பிட்டால் மனிதருக்கு நோய் வரும்.

மினரல் பாட்டில் வாட்டர் -ஐ பயன்படுத்தலாமா?

மினரல் வாட்டர் பயன்படுத்தக் கூடாது.

மினரல் வாட்டர் கம்பெனிகளில் Anti Scale Dosing machine என்று ஒரு மெஷின் இருக்கும்.

இந்த மெஷினின் வேலை தண்ணீரில் உள்ள அனைத்து தாதுப் பொருட்களையும் எடுத்து விட்டு சப்பைத் தண்ணீராக
மாற்றுகிறது. எனவே நல்ல தண்ணீரை ஒன்றுமில்லாத சப்பைத் தண்ணீராக மாற்றுவதற்கு நாம் பல வேலைகளைச்
செய்து அதைப் பாட்டிலில் அடைத்துப் பணம் கொடுத்து வாங்கிச் சாப்பிடுகிறோம்.

எனவே தயவுசெய்து பாட்டிலில் அடைக்கப்பட்ட மினரல் வாட்டர் என்று அழைக்கப்படும் Packaged Drinking Water ஐ யாரும் பயன்படுத்தக் கூடாது.

குடி நீரை இயற்கையாக சுத்திகரிக்கும் முறை என்ன?

தண்ணீரைக் கொதிக்க வைக்கக் கூடாது.
பில்டர் செய்யக் கூடாது.
பாட்டிலில் அடைக்கப்பட்ட நீரை பயன்படுத்தக் கூடாது.

வேறு எப்படித்தான் தண்ணீரை சுத்தப்படுத்துவது என்று கேட்டால்,சாதாரணமாக குழாயில் வரும் அந்தத் தண்ணீரை அப்படியே சாப்பிடலாம்.அதை சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

உலகத்திலேயே மிகப் பெரிய, மிகச்சிறந்த தடுப்பூசி சாதாரண குழாய் தண்ணீர் மட்டுமே.

யார் ஒருவர் குழாய் தண்ணீரை நேரடியாகக் குடித்து வாழ்கிறார்களோ அவர்களுக்கு எந்த நோய்க்கிருமியாலும் நோய் வராது. நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். எனவே தயவுசெய்து குழாயில் வரும் தண்ணீரை அப்படியே சாப்பிடுங்கள்.

குழாயில் வரும் தண்ணீரை எப்படிக் குடிப்பது?

தண்ணீரில் TDS அதிகமாக இருக்கிறது, தாதுப்பொருட்கள் அதிகமாக இருக்கிறது.

சாக்கடைநீர் கலந்து வருகிறது என்றெல்லாம் மனதில் எண்ணம் தோன்றும்.

எங்கள் ஊர் தண்ணீரில் மாசு அதிகமாக உள்ளது என TV, பேப்பர் மூலமாகத் தெரிந்துக் கொண்டோம் என்று பலர் கூறுகிறீர்கள்.

உங்க ஊரில் மட்டுமல்ல உலகத்தில் உள்ள
அனைத்து ஊரிலும் தண்ணீர்
கெட்டுவிட்டதாக அந்தந்த ஊரில் உள்ள
தண்ணீரைப்
பாட்டிலில்
மூலமாக வியாபாரம்
செய்யும் கம்பெனிகள் ஒன்று சேர்ந்து
பிரச்சாரம் செய்கிறது.

அப்பொழுது
தானே நீங்கள் குழாய் தண்ணீரைக்
குடிக்காமல்
பாட்டிலில்
தண்ணீரை வாங்கிக்
குடிப்பீர்கள் என்ற எண்ணத்தில் அவர்கள்
பிரச்சாரம் செய்கிறார்கள்.

மேலும் மருந்து மாத்திரை கம்பெனிகள்
தண்ணீரைக் கொதிக்க வைத்து மற்றும்
பில்டர் செய்து மற்றும் பாட்டிலில்
அடைக்கப்பட்ட நீரைப் பருகுவதால் உலக
மக்களுக்கு நோய் வருகிறது என்பதை
புரிந்து கொண்டு நல்ல விஷயத்தைப்
பிரச்சாரம் செய்வது போல கெட்ட
விஷயத்தை பணம் செலவு செய்து
பிரச்சாரம் செய்து நம்மை நோயோடு
இருக்க வைத்து, அதன் மூலமாக மருந்து
மாத்திரை வியாபாரம் செய்வதற்குத்
திட்டமிட்டு உள்ளார்கள்.

உண்மையிலேயே குழாய் தண்ணீர்
குடித்தால் ஒன்றும் ஆகாது.

இருந்தாலும்
சில ஊர்களில் சாயப் பட்டறை இருக்கிறது,

தண்ணீர் கெட்டிருக்கிறது என்று
ஒருவேளை நாங்கள் நினைத்தால் உங்களது
மனத்திருப்திக்காக சில காரியங்களைச்
செய்யலாம். நான் கூறுவதுபோல உங்கள்
தண்ணீரைக் கீழ்க்கண்ட முறையில்
இயற்கையான முறையில் சுத்திகரிப்பதற்
கு முயற்சி செய்யுங்கள்.

மண் பானை ஒரு மிகச் சிறந்த நீரை
சுத்திகரிக்கும் கருவி.

மண் பானையில் குடிதண்ணீரை ஊற்றி வைத்து இரண்டு மணி நேரம் முதல் ஐந்து
மணி நேரம் வைத்திருந்தால் அந்த
தண்ணீரில் உள்ள அனைத்து கெட்ட
பொருள்களையும் மண்பானை உறிஞ்சிக்
கொண்டு அந்த நீருக்கு மண் சக்தியை
அளிக்கிறது.

எனவே உலகத்திலேயே மிகச் சிறந்த Water Filter மண் பானை ஆகும்.

நாற்பதாயிரம் ரூபாய் செலவு செய்து
உங்கள் வீட்டில் Water Filter வாங்கி
வைத்திருக்கிறீர்களே நாற்பதாயிரம்
ரூபாய்க்கு மண் பானை வாங்கினால்
எவ்வளவு பானை கிடைக்கும், தினமும்
நாம் ஒரு பானையை உடைத்தால் கூட
தீராது.

ஆனால் அப்படிப்பட்ட அற்புதமான
இயற்கையான ஒரு Water Filterஐ யாரும்
பயன்படுத்துவதில்லை.

எனவே
தயவுசெய்து தண்ணீரை மண்பானையில்
வைத்துக் குடித்தால் கெட்ட பொருள்களும்
அழியும். மண்சக்தியும் கிடைக்கும்,
பிராண சக்தி அதிகரிக்கும்.

வெள்ளை நிற பருத்தித் துணியால்
வடிகட்டலாம்.

வெள்ளை நிறத்தில் உள்ள சுத்தமான
பருத்தித் துணியால் ஒரு தண்ணீரை வடி
கட்டினால் அந்தத் தண்ணீரில் உள்ள அனைத்து
நோயை உண்டுசெய்யும் வைரஸ், பக்டீரியா
போன்றவற்றை இந்தத் துணி உறிஞ்சிக்
கொள்கிறது என்ற உண்மை, அறிவியல்
பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதனால்தான் அம்மை போன்ற நோய்கள்
வரும்பொழுது நமது முன்னோர்கள் எந்த
ஒரு மருந்து மாத்திரையும் சாப்பிடாமல்
மருத்துவமனைக்குச் செல்லாமல்
வெள்ளைத் துணியில் வடிகட்டிய நீரில்
குளிப்பாட்டி குணப்படுத்தியிருக்கிறார்கள்.

எனவே தேவைப்பட்டால் இந்த
முறையில் தண்ணீரைச் சுத்தப்படுத்தலாம்.

வாழைப்பழத் தோல் மூலம் சுத்தம்
செய்யலாம்
நாம் சாப்பிடும் சாதாரண வாழைப்பழத்
தோலை மண்பானைக்குள்
இருக்கும்
தண்ணீரில் இட்டு அரை மணி நேரத்திற்கு
பிறகுவெளியே எடுத்து விட்டால் இந்த
வாழைப்பழத் தோல் மண் பானையில் உள்ள
நீரில் உள்ள அனைத்து கிருமிகளையும்,
கெட்ட பொருள்களையும் உறிஞ்சி
எடுத்துவிடுகிறது.

ஆனால் வாழைப்பழத்
தோலை அதிக நேரம் தண்ணீரில்
வைத்திருந்தால் அதுவே ஒரு குப்பையாக
மாறிவிடும். எனவே அரை மணி
நேரத்திற்குள் எடுத்து விட வேண்டும்.

இந்தச் சுலபமான நீரை சுத்திகரிக்கும்
முறையையும் பயன்படுத்தலாம்.

செம்புக் காசு அல்லது செம்பு பாத்திரம்
மூலம் சுத்தப்படுத்தலாம்

செம்பு என்ற உலோக பாத்திரத்தின்
மூலமாக செய்யப்பட்ட ஒரு குடத்திலோ
அல்லது செம்பிலோ நாம் நீரை இரண்டு
முதல் ஐந்து மணி நேரம் வைப்பது
மூலமாக தண்ணீருக்கு அதிகப் படியான
சக்தி கிடைக்கிறது.

அதில் உள்ள கெட்டப்
பொருள் அழிக்கப்படுகிறது.

எனவே
செம்பு என்ற உலோகத்தின் மூலம்
செய்யப்பட்ட பாத்திரங்களை தண்ணீர் வைக்க
பயன்படுத்தலாம். அல்லது மண் பானையில்
செம்புக் காசுகளை போட்டு வைத்தால்
அந்த செம்பு காசுகள் தண்ணீரை
சுத்தப்படுத்திக் கொண்டேயிருக்கும்.

பழங்காலத்தில் மலைகளில் தவம் செய்து
வந்த ரிஷிகள், ஞானிகள், முனிவர்கள்
எப்பொழுதுமே அருகில் ஒரு செம்பு
கமண்டலத்தில் தண்ணீரை வைத்துக்
கொண்டு இருப்பார்கள்.

அவர்களிடம்
சென்று நீங்கள் ஏதாவது வம்பு பேசினால்
அந்த தண்ணீரை எடுத்து நீ நாயாக போவாய் என்று சாபமிட்டவுடன் அந்த மனிதன் நாயாக
போவதைப் போல நாம் படங்களில்
பார்த்திருப்போம்.

செம்பில் வைக்கப்படும் தண்ணீருக்கு
அவ்வளவு சக்தி உள்ளது. எனவே செம்பு என்ற உலோகத்தின் சக்தியின் மூலமாக நாம்
தண்ணீரை சுத்தப்படுத்த முடியும்.

எனவே மேலே கூறப்பட்டுள்ள வகையில்
மண்பானை, வெள்ளை பருத்தித் துணி,
வாழைப் பழத் தோல், செம்பு என்ற உலோகம்
மற்றும் பல இயற்கை முறையில் தண்ணீரை
சுத்தப்படுத்துவதற்கு பல உத்திகள்
இருக்கும் பொழுது நாம் ஏன் செயற்கை
முறையில் சுத்தம் செய்வதற்கு
வாட்டர் பில்டர்?

English Summary :Drinking water filter should not do!