துர்கா பூஜை பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து புவனேஷ்வர், சந்திரகாச்சிக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

சென்னை சென்ட்ரலில் இருந்து அக். 23, 30, நவ.6 ஆகிய தேதிகளில் இரவு 11.45 மணிக்குசிறப்புக் கட்டண ரயில் (06073) புறப்பட்டு, மறுநாள் மாலை 6.30 மணிக்கு புவனேஷ்வரை சென்றடையும்.

மறுமார்க்கமாக, புவனேஷ்வரில் இருந்து அக். 24, 31, நவ.7 ஆகிய தேதிகளில் இரவு 9 மணிக்கு சிறப்புக் கட்டண ரயில் (06074) புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 3 மணிக்கு சென்னை வந்தடையும்.

அதேபோல, சென்னை சென்ட்ரலில் இருந்து அக். 21, 28, நவ.4 ஆகிய தேதிகளில் இரவு 11.45 மணிக்கு சிறப்புக் கட்டண ரயில் (06071) புறப்பட்டு, 3-ம் நாள்(திங்கள்) அதிகாலை 3.45மணிக்கு மேற்குவங்கம் மாநிலம் சந்திரகாச்சியை அடையும்.

மறுமார்க்கமாக, சந்திரகாச்சியில் இருந்து அக். 23, 30, நவ.6 ஆகியதேதிகளில் காலை 5 மணிக்குசிறப்புக் கட்டண ரயில் (06072) புறப்பட்டு, மறுநாள் காலை 11 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *