சென்னை, தொடர் விடுமுறையால், மின் தேவை குறைந்துள்ளது. தமிழகத்தில் தற்போது, மழை காலம் என்றாலும், காலை, மாலையில், மின் தேவை, 13 ஆயிரம் மெகா வாட்டிற்கு மேல் உள்ளது. மற்ற நேரங்களில், 12 ஆயிரத்து, 500 மெகா வாட் என்றளவில் இருக்கிறது.ஒடிசா மாநிலத்தில், சில தினங்களுக்கு முன், ‘தித்லி’ புயல் கரையை கடந்தது.

இதனால், ஒடிசாவில் இருந்து, தமிழகத்திற்கு மின்சாரம் வரும்வழித்தடத்தில், மின் கோபுரங்கள்சாய்ந்தன. தமிழகத்திற்கு, 1,000 மெகா வாட் மின்சாரம் கிடைக்காததால், மின் தேவையை பூர்த்தி செய்ய, மின்வாரியம் திணறியது. இந்நிலையில், ஆயுதபூஜை, விஜயதசமி என, தொடர் விடுமுறையால், தற்போது, மின் தேவை, 11 ஆயிரம் மெகா வாட் என்றளவில் குறைந்துள்ளது. இதனால், மின் வாரியம் நிம்மதி அடைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *