சென்னை வேலைவாய்ப்பு பதிவு அலுவலகத்தில் வரும் நவம்பர் 2 -ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இதில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை முடித்தவர்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் பா.ஜோதி நிர்மலாசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னையில் அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து வரும் நவம்பர் 2 -ஆம் தேதி, சென்னை கிண்டியில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடத்த உள்ளன.

இதில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்கேற்று பணியாளர்களைத் தேர்வு செய்ய உள்ளன. இந்த முகாமில் 35 வயதுக்குட்பட்ட எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்கள் பங்கேற்று பயன் பெறலாம். பொறியியல் பட்டதாரிகளும் பங்கேற்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *