மார்ச் 7ம் தேதி வரை வேலைவாய்ப்புக்கான பதிவை புதுப்பிக்க தவறியோர், சிறப்பு சலுகையின் கீழ் புதுப்பித்துக் கொள்வதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது
புதுப்பிக்க தவறினால், மீண்டும் வாய்ப்பு கிடைக்காது என, வேலைவாய்ப்பு இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பதிவை புதுப்பிக்க வேண்டும். பிற இடங்ளுக்கு குடி பெயர்தல், கவனக்குறைவு மற்றும் பல்வேறு காரணங்களால், 10 சதவீதம் பேர் புதுப்பிக்க தவறி விடுவதால், பதிவு மூப்பை இழந்து விடுகின்றனர்; வேலைவாய்ப்பும் பாதிக்கிறது. 2011 முதல் 2013 வரை, பதிவை புதுப்பிக்கத் தவறியோர், மார்ச் 7ம் தேதி வரை, பதிவை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளலாம் என அரசு இச்சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது.

English Summary : March 7 is the last date to register in Employment exchange for government jobs.