பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் வரும் 28-ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

2022-2023 ஆம் ஆண்டின் பி.இ., பி.டெக் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான 3-வது சுற்று கலந்தாய்வுகள் நிறைவடைந்துள்ள நிலையில், முதலாமாண்டு வகுப்புகள் வரும் 28 ஆம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

வகுப்புகளை தொடங்குவதற்கு ஏதுவாக அறிமுக வகுப்புகளை 14ம் தேதியே நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் செமஸ்டர் தேர்வுகள் தொடங்கும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *