பண்டிகை காலத்தையொட்டி ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் சென்னை சென்டிரல், எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி ஆகிய 8 ரயில் நிலையங்களில் 10 ரூபாயாக இருந்த பிளாட்ஃபார்ம் டிக்கெட் கட்டணம் 20 ரூபாயாக உயர்த்தப்பட்டிருந்தது.

அக்டோபர் 1-ம் தேதி முதல் ஜனவரி 31-ம் தேதி வரை இந்த நடைமுறையானது அமலில் இருக்கும் என்று சென்னை ரயில்வே கோட்டம் கடந்த செப்டம்பர் மாதம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், அந்த 8 ரயில் நிலையங்களின் பிளாட்ஃபார்ம் டிக்கெட் கட்டணம் 20 ரூபாயிலிருந்து 10 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண குறைப்பு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *