maniratnamதுல்கார் சல்மான், நித்யாமேனன் நடிப்பில் மணிரத்னம் இயக்கிய ‘ஓகே கண்மணி’ படத்தின் வெற்றிக்கு பின்னர் அவர் தனது அடுத்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளை தொடக்கிவிட்டார். மீண்டும் ஒரு நட்சத்திரப் பட்டாளத்துடன் வித்தியாசமான கதைத் தளத்துடன் தயாராகியுள்ள மணிரத்னம், இந்த படத்தில் நடிக்கும் நடிகர்களை தேர்வு செய்வதில் தற்போது ஈடுபட்டு வருகிறார்.

முதல் கட்டமாக இந்த படத்தில் நடிக்க கார்த்தி, துல்கார் சல்மான், கீர்த்தி சுரேஷ், ஸ்ருதிஹாசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. இவர்களுடன் இன்னும் சில நடிகர்கள் நடிக்கவுள்ளதாகவும், அதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

‘ரோஜா’ படத்தில் இருந்து மணிரத்னம் இயக்கும் அனைத்து படங்களுக்கும் இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார்.  இந்த வருட இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்லப்படுகிறது!

மேலும் கமல்ஹாசனின் தசாவதாரம், வேட்டையாடுவிளையாடு, ஷங்கரின் அந்நியன் ஆகிய பல சூப்பர் ஹிட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த  ரவிவர்மன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் மணிரத்னம் இயக்கும் படத்திற்கு முதல்முறையாக பணியாற்றவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது இந்திப் படங்களில் பிஸியான ஒளிப்பதிவாளராக இருக்கும் ரவிவர்மன் விரைவில் மணிரத்னம் படக்குழுவினர்களுடன் இணைவார் என்றும் இதுஒரு மாறுபட்ட விஷுவல் ட்ரீட் ஆக நிச்சயம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

English Summary:For the first time in Mani Ratnam’s film joined Cinematographer.