கோடை விடுமுறை என்றாலே மாணவர்கள் கணினி சம்பந்தமான சிறப்பு பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள மட்டுமே அதிகளவு ஆர்வம் காட்டுவார்கள் இந்நிலையில் மாணவர்களுக்கு ஆன்மீகத் தகவல்களை கற்பிக்கும் எண்ணத்துடன் சென்னை அருகேயுள்ள பள்ளிக்கரணை ஆதிபுரீஸ்வரர் கோயில் சார்பில் இலவச தமிழ்ப் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. மே மாத இறுதி வரை நடைபெறவுள்ள இந்த வகுப்புகளை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இந்த பயிற்சி வகுப்பில் ஆத்திச்சூடி, நல்வழி, ஒளவையார் பாடல்கள், சங்கு நாத பயிற்சி ஆகியவைகளுடன் மாணவிகளுக்கு பரத நாட்டிய பயிற்சியும் அளிக்கப்படும்.

காலை 9 மணி முதல் 11 மணி வரை தமிழ் பயிற்சியும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை பரத நாட்டிய பயிற்சியும் அளிக்கப்படும் என்றும் பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு தேவையான எழுதுபொருள், நோட்டுகள் இலவசமாக வழங்கப்படுவதோடு மாணவர்களுக்கு சிற்றுண்டியும் வழங்கப்படும் என பள்ளிக்கரணை ஆதிபுரீஸ்வரர் கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

English Summary: Special Classes in Summer. Free Bharatanatyam Class and Tamil Coaching Classes for Students in Summer.