உதவியாளர், கூட்டுறவு தணிக்கையாளர் ஆகிய பதவிகளுக்கு காலியாக உள்ள 1,863 இடங்களை நிரப்ப வரும் டிசம்பர் மாதம் 27ஆம் தேதி குரூப்-2ஏ போட்டித்தேர்வு நடத்த டி.என்.பி.எஸ்.சி திட்டமிட்டுள்ள நிலையில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் இந்த தேர்வுக்கான வழிகாட்டும் முகாம்களை நடத்தி வருகின்றன. இவற்றில் சென்னை அண்ணா நகர் திருமங்கலத்தில் செயல்பட்டு வரும் ஃபோக்கஸ் அகாதெமி என்ற நிறுவனம் வருகிற 18ஆம் தேதி முதல் குரூப்-2ஏ தேர்வுக்கான வழிகாட்டும் முகாம் நடத்த திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து ஃபோக்கஸ் அகாதெமி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) 1,863 குரூப்-2ஏ பணியிடங்களுக்கான தேர்வை வரும் டிசம்பர் 27-ஆம் தேதி நடத்துகிறது. இந்தத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு தேர்வு செய்து படிக்க வேண்டிய பாட புத்தகங்கள், நேர மேலாண்மை, திட்டமிடுதல் ஆகியவை தொடர்பாக வருகிற 18-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள வழிகாட்டும் முகாமில் விளக்கங்கள் அளிக்கப்படும்.

இதில், அரசுத் துறை உயரதிகாரிகள், துறை வல்லுநர்கள் கலந்து கொண்டு தேர்வு தொடர்பாக மாணவர்களுக்கு விளங்கங்கள், குறிப்புகளை அளிக்கவுள்ளனர். முகாமில் கலந்துகொள்ள கட்டணம் கிடையாது. எனவே, தகுதியுள்ள மாணவர்கள் தங்களது சுயவிவரங்களுடன் அண்ணா நகர் திருமங்கலத்தில் உள்ள ஃபோக்கஸ் அகாதெமிக்கு நேரில் வந்து முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் தகவல் பெற 94427 22537, 99626 12726 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

குரூப்-2ஏ போட்டித்தேர்வு எழுதும் மாணவர்கள் இந்த இலவச முகாமில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

English Summary : Free training camp in Chennai for Group 2A exam candidates.