freetrainingடி.என்.பி.எஸ்.சி நடத்தும் குரூப் 2 காலிப் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு வரும் 15ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு உதவிடும் வகையில் இலவசப் பயிற்சி முகாம் ஒன்று சென்னை ஃபோக்கஸ் அகாதெமியில் வரும் 8ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து ஃபோக்கஸ் அகாதெமி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது: குரூப்-2 பிரிவில் காலியாக உள்ள 1,064 பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வை டி.என்.பி.எஸ்.சி வருகிற 15ஆம் தேதி நடத்தவுள்ளது. இதைத் தொடர்ந்து சென்னை அண்ணா நகர், திருமங்கலத்தில் செயல்பட்டு வரும் ஃபோக்கஸ் அகாதெமியில் வருகிற 8-ஆம் தேதி முதல் தொடர்ந்து 7 நாட்களுக்கு குரூப் 2 நேர்முகத் தேர்வுக்கான இலவசப் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.

இதில், நேர்முகத் தேர்வுக்குச் செல்லும் மாணவர்களுக்கு நடப்பு நிகழ்வுகள், மாணவர்களின் சுய விவரங்கள் தொடர்பாகவும், நேர்முகத் தேர்வுக்கு தயாராகும் விதம் குறித்தும் விளக்கங்கள், குறிப்புகள் அளிக்கப்படும். முகாமில் அரசின் பல்வேறு துறை அதிகாரிகள், வல்லுநர்கள் கலந்துகொண்டு பயிற்சி அளிக்கவுள்ளனர். மேலும், மாதிரி நேர்காணலும் நடைபெறும். இதில் கலந்துகொள்ள கட்டணம் ஏதுமில்லை.

நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ள மாணவர்கள் தங்களது சுய விவரங்களுடன் இலவசப் பயிற்சி நடைபெறவுள்ள அகாதெமிக்கு நேரில் வந்து முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், தகவல் பெற 94427 22537 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary:Free training in Chennai for the Group 2 Exam