தாம்பரம்-செங்கோட்டை விரைவு ரயில் வியாழக்கிழமை முதல் வாரம் 3 முறை இயக்கப்படுகிறது.

தாம்பரம் – செங்கோட்டை இடையே வாராந்திர விரைவு ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஏப்ரல் 8ம் தேதி தொடங்கி வைத்தார். டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் உள்ள கிராமப்புற மக்கள் பயன் பெரும் வகையில் ஏப்ரல் 16ஆம் தேதி முதல் வாரம் தோறும் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஜூன் 1ம் தேதி முதல் இந்த ரயில் வாரம் மூன்று முறை இயக்கப்படுகிறது. இதில் தாம்பரத்திலிருந்து செங்கோட்டைக்கு ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழக்கிழமையும் செங்கோட்டையிலிருந்து தாம்பரத்திற்கு திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமையும் இயக்கப்படும்.

தாம்பரத்திலிருந்து இரவு 9 மணிக்கு புறப்படும் ரயில் விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, அருப்புக்கோட்டை, விருதுநகர், திருநெல்வேலி, சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், தென்காசி வழியாக மறுநாள் காலை 10.50 மணிக்கு செங்கோட்டை சென்றடையும்.

மறுமார்க்கமாக, செங்கோட்டையிலிருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.05 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *