5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்தப்படுமா என்பதற்குத் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு என்பது மத்திய அரசின் முடிவு. இதனைச் செயல்படுத்துவது குறித்து மாநில அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அந்தத் தேர்வை இதுவரை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளவில்லை.

தமிழக அரசின் கொள்கை முடிவு குறித்து முதல்வர், துணை முதல்வருடன் அமைச்சரவையில் முடிவு எடுத்துத்தான் இதனைச் செயல்படுத்துவதா அல்லது நிராகரிப்பதா எனக் கூறமுடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *