இந்தியாவில் 4ஜி நெட்வொர்க் கடந்த ஆண்டின் மூன்று மற்றும் நான்காவது காலாண்டு காலத்திற்கான விவரங்கள் சிக்னல் பற்றிய புதிய அறிக்கையை ஊக்லா வெளியிட்டுள்ளது.

அதன்படி ரிலையன்ஸ் ஜியோ நாடு முழுக்க சுமார் 98.8% பகுதியில் 4ஜி கனெக்டிவிட்டி வழங்கி முதலிடம் பிடித்துள்ளது. இதைத்தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் 90.0% மற்றும் வோடபோன், ஐடியா நிறுவனங்கள் முறையே 84.6% மற்றும் 82.8% கனெக்டிவிட்டி வழங்குகின்றன.

நாட்டின் முன்னணி நிறுவனங்களின் கனெக்டிவிட்டி நாட்டின் 15 பெரு நிறுவனங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. எனினும், 4ஜி நெட்வொர்க் கனெக்டிவிட்டிக்கும், இணைய வேகமும் அதிக வேறுபாடு கொண்டிருக்கின்றன. ஊக்லா வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி நாட்டின் அதிவேக மொபைல் டேட்டா வழங்கிய நிறுவனமாக ஏர்டெல் இருந்திருக்கிறது.

பொதுப்படையாக அதிகளவு கனெக்டிவிட்டி வழங்கும் நிறுவனங்களில் ரிலையன்ஸ் ஜியோ 99.3% பகுதிகளில் சீரான இணைப்பு வழங்கி முதலிடம் பிடித்திருக்கிறது. ஜியோவை தொடர்ந்து ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் முறையே இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *