exam-1712151863 காலியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-2 தேர்வு நடத்தவுள்ளது. இந்த தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு சென்னை அண்ணா நகர், திருமங்கலத்தில் செயல்பட்டு வரும் ஃபோக்கஸ் பயிற்சி மையம் வழிகாட்டும் முகாம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது. டிசம்பர் 19-ஆம் தேதி நடைபெற உள்ள இந்த வழிகாட்டு முகாமில் சேர விரும்புவர்கள் வரவேற்கப்படுகின்றனர்.

இதுகுறித்து ஃபோக்கஸ் பயிற்சி மையத்தின் இயக்குநர் மு.சிபிகுமரன் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு ஒன்று கூறுவதாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 1863 குரூப்-2ஏ காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வை 2016 ஜனவரி 24-ஆம் தேதி நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது. இந்தத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் தேர்வு செய்து படிக்க வேண்டிய பாடப் புத்தகங்கள், நேர மேலாண்மை, திட்டமிடுதல் தொடர்பாக விளக்கமாக எடுத்துரைக்கப்படுகிறது.

இதில் பங்கேற்க ஆர்வமுள்ளோர் தங்களது முழுவிவரக் குறிப்புகளுடன் அண்ணா நகர் திருமங்கலத்தில் செயல்பட்டு வரும் ஃபோக்கஸ் பயிற்சி மையத்தை நேரில் அணுகி முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 94427 22537, 99626 12726 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.,
English summary-Group 2 exam guideline program in chennai