train-161215ரயில் பயணிகளின் வசதியை முன்னிட்டு அவ்வப்போது தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்து வரும் நிலையில் சென்னை சென்ட்ரல் – கோவை இடையே சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக நேற்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது:

ரயில் எண் 00632 என்ற எண்ணுடைய சிறப்பு ரயில் வரும் ஜனவரி 14-ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11.55 மணிக்கு ரயில் புறப்பட்டு, மறுநாள் காலை 8.15 மணிக்கு கோவை சென்றடையும். அதேபோல் மறுமார்க்கமாக ரயில் எண் 06149 என்ற எண்ணுடைய சிறப்பு ரயில் ஜனவரி 15-ஆம் தேதி கோவையில் இருந்து மாலை 6.45 மணிக்கு ரயில் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். இந்த ரயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது
English summary-Chennai to Covai special train