TNPSC_logoதமிழக அரசின் பல்வேறு துறைகளில் உதவியாளர், நேர்முக எழுத்தர் பதவிகளில் 1,947 காலியிடங்களை நிரப்பும் பொருட்டு கடந்த 24-ம் தேதி குரூப்-2ஏ எழுத்துத் தேர்வு நடைபெற்றது. சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இந்த தேர்வு நடைபெற்றது.

டிஎன்பிஎஸ்சி நடத்திய இத்தேர்வினை தமிழகம் முழுவதும் 8 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் எழுதினர். இந்நிலையில் இந்த தேர்வுக்கான (கீ ஆன்சர் என்று கூறப்படும் உத்தேச விடைகள் வெளியாகியுள்ளது. இந்த விடைகள் டிஎன்பிஎஸ்சியின் அதிகாரபூர்வ இணையதளமான www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது

இந்த உத்தேச விடைகளில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் உரிய ஆவணங்களுடன் பிப்ரவரி 3ஆம் தேதிக்குள் அனுப்புமாறு டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. குரூப்-2ஏ தேர்வுக்கு நேர் முகத்தேர்வு கிடையாது என்பதால் இந்த எழுத்துத் தேர்வில் வெற்றிபெறுபவர்களுக்கு அரசு பணி உறுதி என்பது குறிப்பிடத் தக்கது.

English Summary:Group 2 Exam ‘Key Answer’ Released in TNPSC Website.