குரூப் 2 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் 9-ஆம் தேதி கடைசியாகும்.

சமூக பாதுகாப்புத் துறை, உதவி தொழிலாளர் நலத் துறை அதிகாரி, சார் -பதிவாளர் உள்ளிட்ட குரூப் 2 தொகுதியில் 1,199 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த மாதம் 10-ஆம் தேதி வெளியிட்டது.

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 9-ஆம் தேதி கடைசி நாளாகும். இதன்பின், இந்தியன் வங்கி அல்லது பாரத ஸ்டேட் வங்கி மூலமாக விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வரும் 11-ஆம் தேதி கடைசியாகும். குரூப் 2-க்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு நவம்பர் 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *